தொடர்புடைய செய்திகள்
- இஸ்ரேலும் ஈரானும் உடனே சண்டையை நிறுத்துங்க!.. டிரம்ப் சொல்வது நடக்குமா?..
- இந்தியர்களே உடனடியாக வெளியேறுங்கள்: ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை!
- நீ ஒரு முட்டாள்!.. பேட்டியில் தொகுப்பாளரை திட்டிவிட்டு வெளியேறிய டிரம்ப்!...
- டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. கச்சா எண்ணெய் ஒரே நாளில் உச்சம்..!
- ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!.. ஹோர்மஸ் நீரிணையில் பதட்டம்!...
34வது மாடியில் பிளாட் வாங்கிய நபர்.. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த பில்டிங்கில் மொத்தமே 32 மாடி என்று.. ரியல் எஸ்டேட் மோசடி...
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகருக்கு அருகே, 'ஷென்' என்ற நபர் கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முன்பணம் செலுத்தி, ஏமாற்றமடைந்த விசித்திரமான ரியல் எஸ்டேட் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டதால், அந்த கட்டிடத்தின் 34-ஆவது மாடியில் 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வீட்டை அவர் வாங்கியுள்ளார்.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிந்து பல ஆண்டுகள் தாமதமாக 2017-இல் நேரில் சென்று பார்த்தபோதுதான், அந்த கட்டிடமே மொத்தம் 32 மாடிகளை மட்டுமே கொண்டது என்பதும், அவர் வாங்கிய 34-ஆவது மாடியே அங்கு இல்லை என்பதும் தெரியவந்தது.
மாற்று வீடும் கிடைக்காமல், செலுத்திய முன்பணத்தையும் முழுமையாக திரும்பப் பெற முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஷென் போராடி வருகிறார். உள்ளூர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் அந்த நிறுவனத்திற்கு அபராதத்துடன் பணத்தைத் திருப்பித் தர உத்தரவிட்டும், நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லாததால் தற்போதைய 2026-ஆம் ஆண்டிலும் அவரால் பணத்தை மீட்க முடியவில்லை. சட்டப்பூர்வப் பாதுகாப்பற்ற மலிவு விலை வீடுகளை வாங்குவதில் இருக்கும் பேராபத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
Edited by Siva
