வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 14 ஜனவரி 2015 (12:59 IST)

ரஷ்ய வீரர்களை துப்பாகியால் சுட்டுகொன்ற தீவிரவாதி சிறுவன்

ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்றுள்ளான்.
 
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் ஒருங்கிணைத்து புதிய நாடு ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இந்த அமைப்பில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
தங்களிடம் பிடிப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ராணுவ வீரர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். பலரை தலை துண்டித்து கொலை செய்து வருகின்றனர். மிரட்டுவதற்காக அதை வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர்.
 
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் 2 பேரை 10 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. முழங்கால் மண்டியிட்டு இருக்கும் 2 பேரை சிறுவன் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான். 
 
சுட்டு கொல்வதற்கு முன்னதாக அச்சிறுவன் பேச்சு இடம் பெற்றிருந்தது. தான் கஜகஸ்தானை சேர்ந்தவன் என்றும் மத நம்பிக்கை அற்றவர்களை கொலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளான்.
 
உயிரிழந்த 2 பேரும் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.