வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 21 அக்டோபர் 2015 (14:12 IST)

ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாதிமிர் புடீன்

ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடீன் கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
 
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் "ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை, சிரியாவில் நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை நிரூபித்துள்ளது" என்று கூறியுள்ளார்.