வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 13 மே 2016 (09:18 IST)

இன்று வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இன்று வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியாவிற்கு இன்று வருகைதர உள்ளார்.
 

 
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா மே 13 ஆம் தேதியான இன்று, இந்தியா வருகை தர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, இருநாட்டு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகிறார். பின்பு, சிறிசேனாவுக்கு இந்திய பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.
 
இதனையடுத்து, நாளை மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நடைபெறும் மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும், சாஞ்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுவதாக தெரிய வருகிறது.