வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 12 டிசம்பர் 2015 (21:20 IST)

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு : வெளியுறவுத்துறையின் முக்கிய அறிவிப்பு

சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதகரங்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சவூதி அரேபியாவில் பணி புரியும் விசா முடிந்த வெளிநாட்டினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணி புரியும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


 


இந்தியாவை சேர்ந்தவர்கள் சவூதியில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு 3 நாட்களில் தங்களை பற்றிய விவரங்களை தெரிவித்துவிட்டால் தாய் நாட்டிற்கு திரும்பி விடலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கான நிபந்தனைகளும் வெளியாகியுள்ளது.

 நிபந்தனைகள் :

1.  சவூதியில் எவ்வித குற்ற பின்னணியும் இருக்கக்கூடாது.
2.  எந்தவித அபராதமும் நிலுவையில் இருக்கக்கூடாது.

மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.