இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டதாக தகவல்.
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பரிந்துறையின் பேரில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள மீனவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.