1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (12:13 IST)

ஜனாதிபதி நரேந்திர மோடி : சொல்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தவறுதலாக அழைத்துள்ளார்.


 
 
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
விவாதத்தின் போது அதிபர் ஒபாமா பிரதமர் மோடியை ஐனாதிபதி என்று அழைத்ததார். இந்தப் பேச்சுக்கள் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து குறிப்பாக வெளியானது. பின்னர் தவறை உணர்ந்த வெள்ளை மாளிகை, ஜனாதிபதி மோடி என்பதை பிரதமர் மோடி என திருத்தம் செய்து குறிப்பை வெளியிட்டது.