தொடர்புடைய செய்திகள்
- பாலஸ்தீனத்தை தனி நாடாக்க பிரான்ஸ் முடிவு! அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்!
- இஸ்ரேல் - காசா போரும் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் எடுத்த முக்கிய முயற்சி..!
- இந்திய வம்சாவளி வேட்பாளர் ஒரு பைத்தியம்.. டிரம்ப் விமர்சனத்தால் பரபரப்பு..!
- பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!
- இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!
பாலஸ்தீனிய பீலே' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்-குய்யித், காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
சுலைமான் அல்-குய்யித், உதவிக்காக க்ஷ்நிவாரண முகாமில் காத்திருந்தபோது, காசாவை நோக்கி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்தார் என்று பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம், விளையாட்டு வீரர்கள்கூட போரின் கோர விளைவுகளில் இருந்து தப்ப முடியவில்லை என்பதை உணர்த்துகிறது.
இந்தச் செய்தி, விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
