1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2016 (19:18 IST)

முயல் என நினைத்து சிறுமியை சுட்ட வேட்டைக்காரர்கள்!

சீனாவில் முயல் என நினைத்து சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டு கொலை செய்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியில் டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அங்குள்ள பண்ணையில் செடி கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முயல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
 
பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும், சம்பவ  இடத்திலிருந்து தப்பித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அந்த மூன்று வேட்டைக்காரர்களும், அருகிலிருந்த போலீசில் சரணடைந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.