1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Meta Begins Global Layoffs: 8,000 Employees Impacted in Major AI-Driven Restructuring

அதிகாலை 4 மணிக்கு வந்த Layoff இமெயில்.. 8,000 மெட்டா ஊழியர்கள் பணிநீக்கம்..!

மெட்டா
தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான மெட்டா, தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களுக்கு இன்று அதிகாலை 4 மணிக்கே மின்னஞ்சல் மூலம் பணிநீக்க அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. இந்த நடவடிக்கை மற்ற நாடுகளிலும் அந்தந்த நேர மண்டலங்களுக்கு ஏற்ப அடுத்தடுத்த அலைகளாக மேற்கொள்ளப்பட உள்ளது.
 
செயற்கை நுண்ணறிவு துறையில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைத்து வருகிறது. பணிநீக்கம் செய்யப்படுவதை தவிர, சுமார் 7,000 ஊழியர்கள் புதிய AI சார்ந்த பிரிவுகளுக்கு மாற்றப்பட உள்ளனர். நிறுவனத்தின் கட்டமைப்பை எளிமையாக்கவும், சிறிய குழுக்கள் மூலம் வேகமாகவும் திறமையாகவும் செயல்படவும் இந்த மாற்றம் அவசியம் என்று மெட்டா தலைமை அதிகாரி ஜானெல் கேல் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பணியாளர்கள் மத்தியில் பெரும் கவலையும் பாதுகாப்பற்ற உணர்வும் நிலவி வரும் நிலையில், நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்களின் மன உறுதியை பாதித்துள்ளது. மேலும், ஊழியர்களின் மவுஸ் மற்றும் கீபோர்டு அசைவுகளை கண்காணிக்கும் புதிய மென்பொருள் தொடர்பான சர்ச்சைகளும் நிறுவனத்திற்குள் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளன. 
 
கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பிற நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், மெட்டாவின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது டெக் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2026 மாநாடு: புதிய Siri மற்றும் iOS 27 எதிர்பார்ப்புகள்