வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (14:32 IST)

செக்ஸிற்கு காதலி ஒத்துழைக்காததால் அவசர போலிசை அழைத்த 53 வயது முதியவர்

தெற்கு கரோலினாவில் முதியவர் ஒருவர் தன் காதலி செக்சிற்கு ஒத்துழைக்கவில்லை என்று போலிசாருக்கு புகார் கொடுத்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருக்கிறது.
 
தெற்கு கரோலினாவில் வசித்து வருபவர் பேட்ரிக் டோஜட்(53). கடந்த செவ்வாய்க்கிழமை(அக்.6) அவசர போலிசான 911 எண்ணை அழைத்துள்ளார். போலிசார் விரைந்து சென்று விசாரித்து போது அவர் கூறியதைகேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்று போலிசாருக்கு தெரியவில்லை.
 
பேட்ரிக் தன் காதலியை படுக்கைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் அவரின் காதலி அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த பேட்ரிக்  அவசர அழைப்பான 911-ற்கு போன் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் செக்ஸிற்கு ஒத்துழைக்காத தன் காதலியை கைது செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அவரின் காதலியிடம் போலிசார் விசாரித்தபோது, பேட்ரிக் அன்று நாள் முழுவதும் குடித்துக்கொண்டே மதுபோதையில் இருந்தார் என்றும், மேலும் தன்னுடைய படுக்கையறையில் பேரக்குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அதனால் அவரிடம் செக்ஸில் ஈடுபட தனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
அவசர அழைப்பை தவறாக பயன்படுத்தியதற்கக பேட்ரிக் மேல் வழக்குப்பதிவு செய்திருக்கிறது போலிஸ்.