கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் : 23 பேர் பலி
கராச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இதுவரை சுமார் 23 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பின்னர் நடந்த சண்டையில், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 23 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்த சண்டை இன்று காலை வரை நீடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், மேலும் மூன்று தீவிரவாதிகள் விமான நிலையத்தில் மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.