தொடர்புடைய செய்திகள்
- தங்கத்தில் பசை செய்ய முடியுமா? ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல்..!
- 24 மணி நேரத்தில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை..!
- ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள்.. பெரும் பரபரப்பு..!
- மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? மெஹபூபா முஃப்தி ஆவேசம்
- குப்பையில் சிறுவன் கண்டெடுத்த பொம்மை துப்பாக்கியில் பொருத்தும் கருவியா? அதிர்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகள்..!
போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 'ஜெய்ச்-இ-முகமது' அமைப்பு தங்கம் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச எல்லை பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தங்கத்தை அனுப்பி, அதை தரைமட்ட ஊழியர்கள் வழியாக பணமாக மாற்றி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இவர்கள் சதி செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மீது பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இருப்பதால், தங்கம் கடத்துவது பாதுகாப்பானது என அந்த அமைப்பு கருதுகிறது. மேலும், நவீன ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளுடன் ஊடுருவ திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், தோடா-கிஷ்ட்வார்-ராம்பன் பகுதிகளில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது.
சம்பா, பூஞ்ச் மற்றும் குப்வாரா போன்ற எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
