வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (18:31 IST)

40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தொடர்ந்து பத்திரைக்கையாளர்கள், உளவுத்துறையினர், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரையும் கண்மூடித்தனமாக, கொடூரமான முறையில் கொலைபுரிந்து வருகின்றனர்.
 

 
இதன் தொடர்ச்சியாக மத்திய சிரியா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்களின் தலையைத் துண்டித்து எரித்துக் கொன்றுள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு குழு கூறி உள்ளது.
 

 
மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாங்கள் நிரைவேற்றிய கொலைகள் குறித்து வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் சிறுவர்களிடம் கத்தியை கொடுப்பதுபோல் காட்சியும் இடம் பெற்றுள்ளது.