தொடர்புடைய செய்திகள்
- ஈரான் - இந்தியா உறவு 5000 ஆண்டுகள் பழமையாது.. இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு வருத்தம்?
- ஈரானுக்கு உதவும் இந்திய மக்கள்.. கணவர் கட்டிய தாலியை தானமாக கொடுத்த பெண்..!
- குழந்தை இல்லாத தம்பதி.. இறப்பதற்கு முன் மொத்த சொத்தையும் என்ன செய்தார்கள் தெரியுமா?
- மைக்ரோசாப்ட் கொடுத்த திடீர் அதிர்ச்சி.. 4800 பேர் வேலையை விட்டு நீக்கம்...!
- ஸ்ஸ்ஸப்பா முடியல!.. உடலில் துர்நாற்றம்!. 3 வருஷ மெம்பர்ஷிப்பை கேன்சல் செய்த ஜிம்!..
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு இறுதிச்சடங்கு: இந்தியாவுக்கு மட்டும் நன்றி சொன்ன ஈரான்...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு இறுதிச்சடங்கில் இந்தியா பங்கேற்றதற்கு ஈரான் அரசு தனது மனமார்ந்த நன்றியைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான ராஜதந்திர அழுத்தங்கள் காரணமாகப் பல நாடுகள் தங்களின் பிரதிநிதித்துவத்தைத் திரும்பப் பெற்ற அல்லது குறைத்துக் கொண்ட பின்னணியில் இந்தியாவின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கூடாது என சுமார் ஐந்து அரபு நாடுகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு வற்புறுத்தியதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டல் காரணமாக இரண்டு வளைகுடா நாடுகள் உட்பட சுமார் 13 நாடுகள் இந்த நிகழ்வைப் புறக்கணித்தன அல்லது தங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துக் கொண்டன.
இருப்பினும், இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது அதிகாரப்பூர்வக் குழுவை ஈரானுக்கு அனுப்பியது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் இந்திய அரசு சார்பில் பங்கேற்றனர்.
இவர்களுடன் மெகபூபா முஃப்டி, சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அரசியல் மற்றும் மதத் தலைவர்களும் சென்றிருந்தனர். இந்தியாவின் இந்த நட்புறவுச் செயலை ஈரான் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும், இரு நாட்டு உறவை வலுப்படுத்த இது ஒரு விலைமதிப்பற்ற அடித்தளம் என்றும் டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
Edited by Siva
