ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. ஸ்தம்பித்து போன ஐரோப்பிய நாடுகள். என்ன செய்ய போகிறார் டிரம்ப்?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த குறுகிய நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரான் தனது எச்சரிக்கையில், இந்த வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புகளும் இலக்கு வைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, கத்தார் நாட்டின் பெரும்பாலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் இந்த நீரிணையை சார்ந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஏற்றுமதியும் இதனால் முடங்கியுள்ளன. இந்த மூலோபாய முடக்கம் உலக பொருளாதாரத்தில் ஒரு நீண்டகால மந்தநிலையை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Edited by Siva