வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By suresh
Last Modified: திங்கள், 19 மே 2014 (11:18 IST)

ஓடும் பேருந்தில் தீ விபத்து: 30 குழந்தைகள் பலி

கொலம்பியாவில் ஓடும் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 30 பயணிகள் உடல் கருகி பலியாயினர்.

லத்தீன்அமெரிக்க நாடான கொலம்பியாவின், கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரிலிருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் ஃபண்டாசியன் என்ற நகரம் உள்ளது. இந்நகரிலுள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பலர் பேருந்நில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. வேகமாக பேருந்து முழுவதும் தீ மளமளவென்று பரவியது. இந்த தீயில் சிக்கி 14 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள், உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர்.
 
மேலும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
 
இந்த கோரவிபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.