தொடர்புடைய செய்திகள்
- பிரிட்டன் மன்னருக்கு விருந்து பரிமாறிய டிரம்ப் மற்றும் மெலனியா.. என்னென்ன மெனு?
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு!..
- பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது.. டிரம்புக்கு செய்தி அனுப்பிய ஈரான்.. மீண்டும் போரா?
- இந்திய கப்பல் மீது துப்பாக்கி சூடு.. உடனே கப்பல் அதிகாரி கொடுத்த எச்சரிக்கை.. வைரலாகும் ஆடியோ..!
- ஹார்முஸ் பிரச்சனையால் உலகம் முழுவதும் பாதிப்பு.. ஆனால் கேரளாவுக்கு மட்டும் லாபம்: சசிதரூர்
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்.. குவைத் மீது ஈரான் தாக்குதல்.. மீண்டும் பதட்டத்தில் வளைகுடா..
மேற்காசியாவில் பதற்றம் உச்சமடைந்து வரும் வேளையில், குவைத்தில் உள்ள அல்-சலேம் தளத்தை ஈரான் இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து வாஷிங்டன் தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு அது அங்கே என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர் கெல்லி மேயர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்கா தனது ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தனது படைகளை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர் உளவு பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் ஈரானியப் படைகளால் அது வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Siva
