வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (13:31 IST)

ஆபாசப்படத்தில் நடித்து சிக்கிக்கொண்ட ஆசிரியை!

செக் குடியரசு நாட்டில், ஆசிரியை ஒருவரின் ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
செக் குடியரசு நாட்டின் செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் லூசி. 35 வயதான இவர், ஒரு ஆணுடன் ஆபாசப்படத்தில் நடித்த 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது.
 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு லூசி அளித்துள்ள பேட்டியில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, வருமானம் கிடைக்குமே என்ற ஆசையில் அந்த இடத்துக்கு சென்றேன்.
 
அங்கு கொக்கைன் போன்ற போதைப்பொருளை எனக்கு தெரியாமல் தந்து என்னை பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.