வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (17:34 IST)

போலீஸாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்.... பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீபின் மருமகன் சப்தார் அவானை  கைது செய்வது குறித்த வழக்கில் சிந்து மாகாண காவல்துறைத் தலைவரை  பாகிஸ்தான் ராணுவம் கடத்தியதாகத் தகவல் வெளியானது.

இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சியில் ராணுவத்தினருக்கும் போலீஸாருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டதாகவும் இதில்  10 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.