வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (18:50 IST)

திடீரென பரவிய காட்டுத் தீ… தீயணைப்பு வீரர்கள் பலி !

சீனாவில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி  19 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சுச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங் என்ற பகுதியில் பண்ணை ஒன்றூள்ளது . இங்கு, தீ வீசிய காற்றின்  காரணமாக அருகி உள்ள மலைப் பகுதிகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில்,  அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர், அங்குள்ள  மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.