1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2015 (14:08 IST)

பெண்ணின் மார்பகங்களை தழுவிய புத்தமத துறவி

தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது.
 

 
ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து அவர்கள், துறவியை வழிபட வருபவர்கள் தானாகத்தான் முன் வந்து இதுபோல் செய்து கொள்கிறார்களே தவிர, துறவி ஒருபோதும் அவர்களுக்கு எந்த வித தீமையையும் செய்யவில்லை என்றனர்.
 
இது குறித்து அந்த பெண் கூறுகையில், ”அவர் ஆண்களின் மார்பகங்களின் மீதும் அவர் எழுதுவார். ஆகையால் அதுபோல நானும் அதில் பங்கெடுத்துக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.