வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (18:48 IST)

இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

இலங்கை தலைநகரான கொழும்பில் வருகிற 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
வருகிற 23ஆம் தேதி ரகுமானின் இசை நிகழ்ச்சி கொழும்புவில் நடைபெறுவதாக இருந்தது. அதில், பல பின்னணி பாடகர் மற்றும் பாடகியர் பங்கேற்று பாட இருந்தனர்.  ரகுமானின் நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறுவது இதுவே முதல் முறை. எனவே அந்நாட்டு மக்கள், இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
 
இந்நிலையில், விடுதலைப் புலிகளிக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில், அப்பாவி தமிழர்களை கொன்று  குவித்த இலங்கை மண்ணில், ரகுமானின் நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
 
முக்கியமாக, சென்னையில் உள்ள ரகுமானின் வீட்டின் முன்பு, பல்வேறு தமிழ் அமைப்பினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
 
இதனால், அந்த நிகழ்ச்சியை ரகுமான் ரத்து செய்து விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.