வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 27 ஜனவரி 2015 (08:53 IST)

அமெரிக்காவின் சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம்: சீனா எச்சரிக்கை

அமெரிக்காவின் சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம் என்று சீனப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. 
 
நாடுமுழுவதும் 66 ஆவது குடியரசு தின விழா கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
 
குடியரசு தின விழாவையொட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அமைதி மற்றும் வளர்ச்சியில் உயர்மட்டநிலையை அடைய செய்வது தொடர்பாக ஒத்துழைப்பு நட்புறவை மேம்படுத்த இந்தியாவுடனான ஒருங்கிணைந்த முயற்சிகளை செய்ய சீனா விரும்புவதாக ஜி ஜின்பிங் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துளளார்.
 
இந்நிலையில் "அமெரிக்காவின் சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம்" என்று சீன நாளேடுகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய நாளேடுகளில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது.
 
சீன நாளேடுகளில் வெளியான கட்டுரைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
அமெரிக்காவின் சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். பெய்ஜிங்கிற்கு எதிராக புதுடெல்லியை திசை திருப்ப வாஷிங்டன்னால்(அமெரிக்காவால்) முயற்சிக்கப்படுகிறது. அதற்காகவே அண்மைகாலமாக இந்தியாவுடன் அமெரிக்கா அதிகளவு நெருக்கம் காட்டுகிறது.
 
அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை சர்வதேச அளவில் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
ஆசியாவில் முன்னிலை என்று அமெரிக்காவின் தந்திரத்திற்கு ஆதரவை பெருவதற்கு அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள கொள்கை தளர்வுகளை செய்துள்ளது.
 
சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க வரலாற்று சிக்கல்களில் வேறுபாடுகளை களைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்று மேற்கத்திய மீடியாக்களில் வெளியாகிய செய்திகளை குறிப்பிடுகின்றன.
 
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது, சீனாவின் டிராகன் மற்றும் இந்திய யானைக்கு (சீனாவுக்கும் - இந்தியாவுக்கும்) இடையே நிரத்தரப் பகையை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் உள்குத்து வேலையாகும்.
 
இந்தியாவுடன் நெருங்கிவந்து இருநாடுகள் இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம். இந்தியாவை அதன் பெரியஅண்டை நாட்டால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு தயாராக வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா தூண்டிவிடுகிறது.
 
அமெரிக்காவில் மிகவும் சாதுரியமாக விரிக்கப்பட்டுள்ள சதிவலையில் இந்தியா சிக்கிவிடக்கூடாது. இரு நாடுகள் இடையே நிலவும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைக்கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இரு நாடுகளும் முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.