செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 9 ஜூலை 2015 (02:32 IST)

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் ரகசியமாக சப்ளை செய்யும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதிகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் மிக ரகசியமாக செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
 

 
கடந்த மே மாதம், சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அபு சயாப் என்பவர் கொல்லப்பட்டார். அவரது மனைவி உம் சயாப் சிறை பிடிக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய போது, ஐ.எஸ். ஆண் தீவிரவாதிகளுக்கு டிவிட்டர் மூலம் செக்ஸ் அடிமைகளை அவர் பிடித்து கொடுத்தது தெரிய வந்தது.
 
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. ஆதே வேளையில், தீவிரவாதம் மீது நம்பிக்கை கொடுண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் செக்ஸ் மீதும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
 
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில், ஆண் தீவிரவாதிகள் படை போன்று பெண் தீவிரவாதிகள் படையும் உள்ளது. இந்த பெண் படைகள்தான் தற்போது ஆண் தீவிரவாதிகளின் செக்ஸை வேட்டையை தணிக்கும் வகையில், அவர்களுக்கு தேவையான செக்ஸ் ஆசையை பூர்த்தி செய்வதுடன், குழந்தைப் பெற்றுத் தரும் முக்கிய பணியாக கொண்டுள்ளனர்.
 
மேலும், சமுக வலைதளவான டிவிட்டர் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைப் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மிக ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட செக்ஸ் அடிமைகள் அவர்கள் வசம் உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.