1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:48 IST)

தண்ணீர் குடிக்க வந்து சிறுமியை பலாத்காரம் செய்த வெறியன்!

தண்ணீர் குடிக்க வந்து சிறுமியை பலாத்காரம் செய்த வெறியன்!

இலங்கையில், மொனராகலை வெடிகும்புரா என்ற பகுதியில் 15 வயது சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். தண்ணீர் குடிக்க வந்தது போல் வந்து சிறுமியின் வாழ்க்கையை சீரழித்துள்ளான்.


 
 
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க சிறுமி உள்ளே சென்றதும், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
 
சிறுமியை ஒரு அறையில் வைத்து பலாத்காரம் செய்த அந்த நபர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், கொன்றுவிடுவதாக மிரட்டி சென்றுள்ளான். மிரட்டலுக்கு பயந்து சிறுமியும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை.
 
பின்னர் அடுத்த நாள் அந்த நபர் குடிபோதையில் அங்கு வந்து சிறுமியை திருமணம் செய்து தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் துருவி துருவி கேட்டதில் பலாத்கார சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.
 
இதனையடுத்து காவல்துறையில் சிறுமியின் பெற்றோர்கள் அந்த நபர் மீது புகார் அளித்தனர். காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.