வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 11 நவம்பர் 2014 (15:45 IST)

140 ஆண்களைக் காதலித்து பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்: காதலர்களின் சில்மிஷங்கள் பற்றி புத்தகம் வெளியிட்டார்

இங்கிலாந்தைச் சேர்ந்த நடன மங்கையான சாண்டி நார்டோ, இதுவரை 140 ஆண்களைக் காதலித்து பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறிப் புத்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 53 வயதுடைய சாண்டி நார்டோ. இவர் தனது 20 ஆவது வயது முதல் அழகு மிகுந்த நடன மங்கையாகத் திகழ்ந்தவர்.
 
அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த அவர் உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
அவர் பல ஆண்களுடன் காதல் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்நாளில் இதுவரை 140 ஆண்களைக் காதலித்து இருப்பதாகவும், அவர்களுடன் ‘செக்ஸ்’ உறவும் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் விரிவாகப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். தற்போது அந்தப் புத்தகம் வெளியாகி உள்ளது. அதில், தனது 140 காதலர்களின் ‘செக்ஸ்‘ சில்மிஷங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
 
மேலும் அவர்களின் ‘செக்ஸ்‘ நடவடிக்கைகள் திறன் மற்றும் செயல்பாடுகளை தர வரிசைப்படுத்தி, அவர்களின் ‘செக்ஸ்‘ திறனுக்கு மதிப்பெண் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.