வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. நிதிநிலை அறிக்கை
  3. மத்திய நிதிநிலை அறிக்கை 2014-15
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (12:18 IST)

காஞ்சிபுரம், வேளாங்கண்ணி புனிதத் தலங்களுக்குச் சிறப்புத் திட்டம்

தமிழகத்தின் புனிதத் தலங்களான காஞ்சிபுரம், வேளாங்கண்ணி நகரங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இவை உள்ளிட்ட, நாட்டின் ஐந்து புனிதத் தலங்களில் 'ஹிருதய்' திட்டம் செயல்படுத்தப்படும். மதுரா, அமிர்தசரஸ், கயா ஆகியவை இதர புனித நகரங்களாககும். 
 
தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு விரிவாக்கத் திட்டம் (ஹிருதய்) திட்டம், இந்த ஐந்து புனித நகரங்களில் செயல்படுத்தப்படும். சுற்றுலாவையும் நமது கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.