வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 18 மே 2016 (06:06 IST)

ஆர்.கே.நகர் தொகுதியில் மறுதேர்தல் நடத்த கோரிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் மறுதேர்தல் நடத்த கோரிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்   வசந்தி தேவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
 

 
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக சார்பில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவி மற்றும் பலர் போட்டியிடுகின்றார்.
 
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் மை எளிதில் அழிந்துவிடுகிறது என வசந்தி தேவி புகார் தெரிவித்தார். இதனால், போலி மை பாட்டில்கள் அகற்றப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
 
இந்த நிலையில், இசிஐ பள்ளி வாக்கு மையத்தில் உள்ள 11 சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். வசந்தி தேவியின் புகாருக்கு இதுவரை தேர்தல் ஆணையம் எந்த விளக்கவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.