தேமுதிக விவகாரம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தேமுதிக விவகாரம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தேமுதிக விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேமுதிக வை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாக வைகோ கூறுவது அபாண்டம். வைகோ அவர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்.
இன்னும் 2 நாட்களில் திமுக கூட்டணியில் எந்த எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.