வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: புதன், 30 மார்ச் 2016 (19:17 IST)

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதல்வர் : தேமுதிக அறிவிப்பு

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று தேமுதிக கூறியுள்ளது.


 

 
மக்கள் நலக்கூட்டணி சார்பாக கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசிய போது “ மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா மதுரையில் நடைபெறும். அதேபோல், துணை முதலமைச்சராக வைகோ நியமிக்கப்படுவார்” என்று கூறினார்.
 
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிதியமைச்சராகவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கல்வித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.