வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (12:55 IST)

மணிரத்னம் படம் - வதந்திகளை மறுத்த சுகாசினி

நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி ஆகியோரை வைத்து தெலுங்கு, தமிழில் புதிய படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்தப் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்.
 
ஐஸ்வர்யா ராய் நடிப்பதில் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கு உடன்பாடில்லை. குழந்தை ஆராத்யாவை வளர்ப்பதில் ஐஸ்வர்யா ராய் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம். மாமியாரின் எதிர்ப்பு காரணமாக சினிமாவில் நடிப்பதை தள்ளிப் போட்டு வந்தவர் மணிரத்னம் படத்தில் ரீஎன்ட்ரியாக நினைத்தார். முதலில் சம்மதம் கூறியவர் மாமியாரின் எதிர்ப்பால் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
 
அதேபோல் மகேஷ்பாபுவும் படத்திலிருந்து விலகியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. 
 
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேரளாவில் பேட்டியளித்த சுகாசினி, மணிரத்னம் இயக்கும் படத்தில் நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் நடிப்பதை உறுதி செய்தார்.
 
இந்தப் படம் ஒரு ஸ்பை த்ரில்லராம். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.