1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : புதன், 28 மே 2014 (13:11 IST)

பாதியை பாரு மீதியை சொல்லு கோடியை அள்ளு

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆர்யா, அமலா பால், தாப்ஸி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஆறு புதுமுக நடிகர்களும் அறிமுகமாகிறார்கள்.
இந்தப் படத்தை அறிவித்த கையோடு படத்தில் கதையே கிடையாது என்று அதிர்ச்சி தகவலை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் பார்த்திபன். அன்றிலிருந்து இன்றுவரை தினம் ஒரு ஆச்சரிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 

சமீபத்திய பார்த்திபன் அதிரடி, படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு இரண்டாவது பாதியை யூகித்து சரியாக கூறினால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். முதல் பாதியில் சொல்லப்படும் கதையை வைத்துதான் இரண்டாவது பகுதியில் என்ன வரும் என்பதை யூகிக்க முடியும். ஆனால் முதல் பாதியில்தான் கதையே கிடையாதே என்று சவாலுடன் ஒரு அதிர்ச்சி குண்டையும் வீசுகிறார் பார்த்திபன்.
ஒரு சினிமாவை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஒன்று சேர்ந்து நடத்தும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கி வருகிறார் என்று பட யூனிட்டிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
 
பார்த்திபனின் எடக்கு மடக்கான சவாலுக்கு உங்களில் யாராவது தயாரா?