வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia

அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்தார் - நடிகை ராதா புகார்

தொழிலதிபர் ஒருவர் தன்னை அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்ததாக நடிகை ராதா பரபரப்பு புகார் தந்திருக்கிறார்கள்.
FILE

கமிஷனர் அலுவலகமாக கள்ளக் காதலின் புகார் கூடா? பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதாவை நினைவிருக்கிறதா? அவரை வைத்து படம் தயாரிப்பதாகக் கூறி பைசூல் என்ற ஷ்யாம் ராதாவுடன் நெருங்கி பழகியிருக்கிறார். சினிமாவில் பிரபலமாகிவிட்டோம், இனி குழந்தை குட்டி என்று செட்டிலாகலாம் என்ற கனவில் இருந்த ராதாவிடம் பைசூல் தனது காதலை சொல்லியிருக்கிறார். ராதாவும் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

காதல் கல்யாணத்தை நோக்கிப் போகாமல் கட்டிலை நோக்கிப் போனதால்...

காதல் கல்யாணத்தை நோக்கிப் போகாமல் கட்டிலை நோக்கிப் போனதால் ராதா கமிஷனர் அலுவலகம்வரை வர வேண்டியதாயிற்று.

கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று என்னிடம் பைசூல் உல்லாசம் அனுபவித்தார். நானும் உடன்பட்டேன். ஆறு வருடங்கள் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்தோம். முதலில் அப்பா அம்மா ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என திருமணத்தை ஒத்திப் போட்டார். இப்போது அவரின் அப்பா அம்மா இருவரும் இறந்துவிட்டார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் நடிகையை திருமணம் செய்ய முடியாது வைப்பாட்டியாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராதா தpவித்துள்ளார்.

அவரின் பிரதான குற்றச்சாட்டு, என்னிடமிருந்து நகையாகவும் பணமாகவும் 50 லட்சம்வரை பைசூல் வாங்கியிருக்கிறார் என்பதாகும்.

தனக்கு நீதியும் பணமும் கிடைக்கவும், இன்னும் பல நடிகைகள் பைசூலின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகாமல் இருக்கவும் இந்த புகாரை ராதா தந்திருக்கிறார்.