வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 21 ஜூன் 2014 (10:54 IST)

அஜீத்துக்கு பிறகு விக்ரமை இயக்கும் கௌதம்...?

அந்நியன், பீமா, ஐ என்று நடிக்கிற எல்லா படத்துக்கும் தலா நாலு வருடங்கள் தாரைவார்க்க தயங்காதவர் விக்ரம். இப்படியே போனால் ரசிகர்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்பதை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்டவர், ஐ வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களை கமிட் செய்ய ஆரம்பித்துள்ளார்.
தற்போது ஃபாக்ஸ் ஸ்டார், முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறவர் விஜய் மில்டன். குறுகியகால தயாரிப்பாக தயாராகிவரும் இப்படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என பேசப்படுகிறது. 
 
சிம்பு, அஜீத் படங்களை ஒரே நேரத்தில் கௌதம் இயக்கி வருகிறார். அஜீத் படத்தின் சில முக்கிய காட்சிகள் சமீபத்தில் மலேசியாவில் படமாக்கப்பட்டது. செப்டம்பரில் மொத்த படத்தையும் முடித்து நவம்பரில் படத்தை வெளியிடுவதாக திட்டம். அப்போது விஜய் மில்டன் படம் முடிந்து விக்ரமும் ப்ரீயாகிவிடுவார்.
 
ஐ படத்துக்குப் பிறகு விக்ரமை தரணி இயக்குவார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. அதனை விஜய் மில்டன் தட்டிப் பறித்தார். அடுத்து கௌதம். என்ன செய்யப் போகிறார் தரணி?