மகனின் இரண்டாவது படம் - சரித்திரம் படைக்க நினைக்கும் விஜயகாந்த்
மகன் சண்முக பாண்டியனை அறிமுகப்படுத்த பல மாதங்கள் கதை கேட்ட விஜயகாந்த் கடைசியில், அதிகம் அனுபவம் இல்லாதவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
படம் பணால். இரண்டாவது படமாவது நூலறுந்த பட்டமாகக் கூடாது என்று நினைக்கிறார் கேப்டன்.
சரித்திர கதைதான் இப்போது ட்ரெண்ட் என்பதால், நல்ல சரித்திர கதையாக இருந்தால் மகனை நடிக்க வைக்கலாம் என்ற திட்டம் இருக்கிறதாம் விஜயகாந்துக்கு.
தயாரிப்பை பற்றியும், பணத்தைப் பற்றியும் கவலையில்லை. தயாரிப்பது அவரது கேப்டன் சினி கிரியேஷன்ஸ். பைனான்ஸுக்குதான் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருகிறதே.
சரித்திர கதை இருந்தால் தைரியமாக விஜயகாந்தை அணுகலாம்.