ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2025 (08:40 IST)

நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது என ட்விட்டரில் விளக்கம்..!

நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது என ட்விட்டரில் விளக்கம்..!
நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை 44-ல் நடந்த சாலை விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். 
 
ஆந்திராவின் புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் திரும்பி கொண்டிருந்தபோது, அவர் பயணித்த கார் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டு சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்ற நிலையில், விஜய்யின் ஓட்டுநர் போலீசில் புகார் அளித்துள்ளார். விபத்து நடந்த பிறகும், நடிகர் பத்திரமாக ஹைதராபாத்தை அடைந்தார்.
 
ரஷ்மிகா மந்தனாவுடனான நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, புட்டபர்த்தி ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆஸ்ரம புகைப்படங்களில் விஜய்யின் விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை ரசிகர்கள் கண்டறிந்தனர்.
 
விபத்து குறித்து X சமூக வலைதளத்தில் பதிவிட்ட விஜய், "எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. கார் மோதலை சந்தித்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். என் தலை சற்று வலிக்கிறது, ஆனால் ஒரு பிரியாணியும் நல்ல தூக்கமும் சரி செய்ய முடியாத வலி எதுவும் இல்லை" என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார்.
 
Edited by Siva