வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2015 (13:33 IST)

’பம்பர கண்ணாலே’ கதாநாயகி ஆர்த்தி அகர்வால் திடீர் மரணம்

பம்பர கண்ணாலே படத்தில் நடித்த ஆர்த்தி அகர்வால் அறுவை சிகிச்சை தோல்வியால் நேற்று [06-06-2015] மரணம் அடைந்துள்ளார்.
 

 
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் பிறந்தவரான ஆர்த்தி அகர்வால் (31) பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையானார்.
 
தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005இல் அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடந்தது.
 
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். லைப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
கடைசியாக இவர் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். இந்த திரைப்படம் இவர் இறப்பதற்கு முதல் நாள்தான், அதாவது 05-06-2015 அன்றுதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.