வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2025 (08:40 IST)

என்னைக் கல்யாணம் பண்ணிக்க யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?… தமன்னா கருத்து!

என்னைக் கல்யாணம் பண்ணிக்க யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ?… தமன்னா கருத்து!
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு ஒரு குறுகிய காதலிலும் இருந்து பிரிந்துவிட்டார்.

இப்போது சிங்கிளாக இருக்கும் தமன்னா கல்யாணம் குறித்துப் பேசியுள்ளார். அதில் ”நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவருக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்க விரும்புகிறேன். அவர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நான் இப்பிறவியில் அவருக்குக் கிடைத்திருப்பதாக அவர் நினைக்க வேண்டும்.  அந்த அதிர்ஷ்டசாலிக்காகதான் நான் இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறேன். யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.