1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Suriya Hints at a Potential Sequel to 'Karuppu' Amid Spectacular Box Office Success

'கருப்பு 2' உருவாக வாய்ப்பு உள்ளதா? சூர்யா தந்த இன்ப அதிர்ச்சி தகவல்..!

சூர்யா கருப்பு திரைப்படம்
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் 'கருப்பு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. 
 
சென்னையில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில், படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எழுப்பிய உற்சாக கேள்விக்கு, "பார்க்கலாம் சார்"  என்று சூர்யா புன்னகையுடன் அளித்த விளையாட்டுத்தனமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படம், வெளியாகி 9 நாட்களை கடந்த நிலையிலும் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டையாடி வருகிறது. மே 23 நிலவரப்படி இப்படம் இந்தியாவில் மட்டும் 149.25 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. தெய்வீகம், நீதி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்ற அழுத்தமான கதை களத்தை கொண்ட இத்திரைப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொண்ட சூர்யா, ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மீது தான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்றும், வெறும் 30 முதல் 45 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இம்முடிவு தன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 
 
இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, 'கருப்பு 2' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?!.. தயாரிப்பாளர் கொடுத்த புது அப்டேட்!...