தொடர்புடைய செய்திகள்
- துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?
- ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!
- இந்திய மொழிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் கமல்: நடிகர் சங்கம் அறிக்கை..!
- பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!
- ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம்… ஷூட்டிங் எப்போது?
சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!
சூரி, சந்தானம் ஆகிய இருவருமே தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த நிலையில், தற்போது இருவருமே ஹீரோவாகிவிட்டனர். இந்த நிலையில், ஹீரோவாக சந்தானத்தை சூரி முந்திவிட்டதாகவே கருதப்படுகிறது.
ஒரே நாளில் சூரியின் 'மாமன்' மற்றும் சந்தானத்தின் 'டி.டி.3' வெளியான நிலையில், 'மாமன்' திரைப்படம் தான் அதிக வசூல் பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, 'மாமன்' படத்திற்கு சூரி எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், ஆனால் 'டி.டி.3' திரைப்படத்திற்கு சந்தானம் ஐந்து கோடி மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹீரோவாக சந்தானத்தை சூரி மிஞ்சினாலும், இன்னும் காமெடியனாக சந்தானம் தான் சூரியை விட உயரத்தில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. எஸ்.டி.ஆர் 49 படத்தில் காமெடியனாக சந்தானம் நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியிருப்பதாக தெரிகிறது. அதேபோல் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதற்கும் அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது
எனவே, இனிமேல் சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக, காமெடியனாகவே தொடர்ந்து நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
