செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2016 (19:41 IST)

எதுக்கு இந்த கொலவெறி... கே.வி.ஆனந்தின் ஆதங்கம்

ஒரு காலத்தில் யார் கேட்டாலும் கால்ஷீட் தரக்கூடிய நிலையில் இருந்தது கே.வி.ஆனந்தின் புகழ்.

தனுஷ் உடன் கே.வி.ஆனந்த்

மாற்றான், அனேகன் படங்களின் அடுத்தடுத்த தோல்வியால், நாம எங்க இருக்கிறோம் என்பது கே.வி.ஆனந்துக்கே பிடிபடவில்லை. இந்நிலையில் மாஸ் நடிகர்கள் அவருக்கு பிடி கொடுப்பார்களா?
 
அஜித்தை இயக்குகிறார், ஆர்யாவை தூக்குகிறார் என்று வதந்தியாக வருகின்றனவே தவிர உறுதியாக எதுவும் கே.வி.ஆனந்த் விஷயத்தில் நடக்கவில்லை.
 
கே.வி.ஆனந்தைப் போலவே இரண்டு அட்டர் ப்ளாப்களை கொடுத்துவிட்டு தட்டுத் தடுமாறி நிற்கும் ஜீவாவுடன் கே.வி.ஆனந்த் கூட்டணி வைப்பதாக எழுதினர். அதுவும் ஒரு நாளைக்குதான். விஜய் சேதுபதிக்காக ஜீவாவை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த் என்று அடுத்த நாளே வெளியானது ஒரு வதந்தி.
 
ஜீவான்னா ஜீவா என்று ஏங்கிக் கிடந்தவருக்கு எப்படியிருக்கும்? 
 
"நான் ஜீவாவை நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஏங்க?.. எதுக்கு இந்த கொலை வெறி?" என்று தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கப்பட்டிருக்கிறார் கே.வி.ஆனந்த்.
 
வெந்த புண்ணில் வேல்கம்பு பாய்ச்சுவதில் இந்த இணையவாசிகளுக்கு கூச்சமேயில்ல.