வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2015 (11:48 IST)

கமல் குறித்து கருத்து தொரிவிக்க மறுத்த நடிகர் சித்தார்த்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்த நடிகர் சித்தார்த் தற்போது கடலூரில் முகாமிட்டுள்ளார். நேற்று கடலூரில் வெள்ளம் பாதித்த 15 கிராமங்களை அவர் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,


 
 
"கடலூர் மாவட்டத்தில் நிலைமை மோசமாக உள்ளது. எனினும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட அளவுக்கு மோசமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதைய தேவை உணவு அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட காலமாக பயன்படக் கூடிய பொருள்களே இப்போது தேவை" என்றார்.
 
சென்னையிலுள்ள சித்தார்த்தின் வீடு, மூன்று கார்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் நீரில் மூழ்கிவிட்டன. 'ஒரேநாளில் அனைத்தையும் இழந்த நடுத்தர மக்களுக்காக வருந்துவதாகவும், முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களை விட உதவிக்கரங்கள் நீட்டுபவர்கள் அதிகம் உள்ளனர்' எனவும் அவர் கூறினார்.
 
தமிழக அரசு மீதான கமலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு சித்தார்த் பதிலளிக்கவில்லை. மாறாக, நிவாரண உதவிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.