வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (13:04 IST)

தேவி இப்படி சோதிக்கலாமா?

ருத்ரம்மாதேவி திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், ஆகஸ்டிலேயே திரைக்கு வந்திருக்கும். படவேலைகள் முடியாததால் செப்டம்பரில் படம் திரைக்கு வரும் என்றனர்.


 

 
கடைசி நேரத்தில் செப்டம்பர் என்பதை அக்டோபர் 9 என மாற்றினர். இந்தமுறை கண்டிப்பாக வந்துவிடுவோம். கிராபிக்ஸ் பணிகள் அதற்குள் முடிந்துவிடும் என்று நம்பிக்கை தந்தனர்.
 
ருத்ரம்மாதேவியின் தடுமாற்றம் காரணமாக, தயாராக இருக்கும் பிற படங்கள் எப்போது வெளியாவது என்ற குழப்பத்தில் உள்ளன. பாகுபலிக்குப் பிறகு வருகிற பிரமாண்ட படம், ருத்ரம்மாதேவி.
 
அதனுடன் போட்டி போட்டால் மற்ற படங்களுக்கு காலி தியேட்டர்தான் என்பது கன்பார்ம். அதனால், ருத்ரம்மாதேவியின் வெளியீட்டை பொறுத்து தங்கள் படத்தை வெளியிட காத்திருக்கிறார்கள்.
 
சமீபத்திய செய்தி, அக்டோபர் 9 -ஆம் தேதியும் படம் வெளிவருவது சந்தேகம்தானாம். வழக்கமான அதே, கிராபிக்ஸ் தாமதம்.

தேவி இப்படி சோதிக்கலாமா?