1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rishab shetty give the update off kanthara chapter 2

விரைவில் பார்ட் 3!.. காந்தாரா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.. ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!...

kanthara
கர்நாடக மாநிலத்தில் மலைப்பகுதியில் பழங்குடி மக்களின் கடவுளாக பார்க்கப்படும் காவல் தெய்வமான பஞ்சுருளி தெய்வத்தை அடிப்படையாக வைத்து கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம்தான் காந்தாரா. இந்த படம் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.

எனவே, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் ஒன் என்கிற தலைப்பில் ரிஷப் ஷெட்டி உருவாக்கினர். இந்த திரிப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..

இந்நிலையில்தான, ஊடகம் ஒன்றில் பேசிய ரிஷப் ஷெட்டி ‘நடிகராக பிஸியாக இருந்தாலும் இயக்கத்தை நான் ஒருபோதும் கைவிடவில்லை.. காந்தாரா பிரான்சைஸின் அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 2-வுக்கான  கதைக்களத்தை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார். இது காந்தாரா பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.