1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ravi mohan complaing worker stoled neckless

10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு!. ரவி மோகன் வீட்டில் நடந்தது என்ன?...

ravi mohan
கோலிவுட்டில் உள்ள முக்கிய நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதோடு மனைவி ஆர்த்தியும் அவரின் அம்மா சுஜாதாவும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பல புகார்களை அடுக்கடுக்காக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன்.ஒருபக்கம் பாடகி கென்னிஷா என்பவரோடு ரவி மோகன் இணைட்து பேசப்பட்டார். தன் மகன்களை பார்க்க கூட தனது மனைவியின் குடும்பத்தினர் விடுவதில்லை. இதனால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன் என்று சில நாட்களுக்கு முன்பு பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன்..

தற்போது அதிலிருந்து மீண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்நிலையில்தான் சென்னை ஈஞ்சம்பாகக்த்தில் உள்ள ரவி மகன் வீட்டில் பணிபுரியும் பெண் அங்கு சிறை பிடிக்கப்பட்டதாக அந்த பெண்ணின் கணவர் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த பெண் 10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் 40 ஆயிரம் பணத்தை திருடிவிட்டதாக ரவி மோகனின் மேனேஜர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ரவி மோகன் வீட்டிலிருந்த அந்த பணிப்பெண்ணை போலீசான நேற்று மீட்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
5 நாட்களில் 50 கோடி கிளப்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் சமந்தாவின் எங்கள் தங்கம் !