வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 20 ஜூலை 2015 (20:28 IST)

மெட்ராஸ் போல யதார்த்தமாக இருக்க வேண்டும் - ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்த ரஜினி

ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து இதுவரை எதுவும் கூறாமலிருந்த இயக்குனர் ரஞ்சித், தான் கலந்து கொண்ட திரைப்பட விருது வழங்கும் விழாவில் படம் குறித்து ஓரிரு தகவல்களை கூறினார்.
 
மெட்ராஸ் படத்தின் கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருந்தது போல், எனது படத்திலும் இருக்க வேண்டும் என ரஜினி ரஞ்சித்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தத் தகவலை ரஞ்சித் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். 
 
ரஜினியை வைத்து இயக்கப் போகும் படத்தில் முள்ளும் மலரும் காளியை கொண்டுவர முயற்சி செய்வேன் என்றும் ரஞ்சித் கூறினார்.
 
ரஜினி நடித்தப் படங்களில் நடிப்புக்காக இன்றும் நினைவுகூரப்படுபவை வெகு சொற்பம். அதில் மகேந்திரனின் முள்ளும் மலரும் படமும் ஒன்று. அந்தப் படத்தில் ரஜினி ஏற்று நடித்த காளி கதாபாத்திரம் வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். அதேபோன்ற யதார்த்தமான ரஜினியை ரஞ்சித்தின் படத்தில் எதிர்பார்க்கலாம் என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.