வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 மே 2015 (16:05 IST)

நான் பிஸி, நீ என்ன வேணா செய்துக்கோ...

நேபான பூகம்பத்துக்கு அடுத்து, ராதிகா ஆப்தேயின் நிர்வாண வீடியோவைப் பற்றிதான் அதிகம் பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அனுராக் காஷ்யபின் குறும்படத்துக்காக அவர் நடித்த நிர்வாண காட்சிதான் இப்போது இணையத்தில் உலவுகிறது. எந்தக் களவாணி அதை இணையத்தில் ஏற்றினான் என கொலவெறியுடன் தேடிக் கொண்டிருக்கிறார் அனுராக். போலீஸிலும் புகார் தந்திருக்கிறார்.
 

 
நிர்வாணச் சாமியார்களை வழிபடும் காவி கட்சி ஒன்று, துண்டு நிர்வாணப் படத்துக்காக ராதிகா ஆப்தேயை கைது செய் என்று கூக்குரலிடுகிறது. இந்த களேபரத்துக்கு நடுவில், சம்பந்தப்பட்ட ராதிகா ஆப்தே என்ன சொல்கிறார்?
 
"வேலைவெட்டி இல்லாதவனுங்கதான் இதையெல்லாம் செய்றாங்க. என்னுடைய நிர்வாணப் படத்தை ரிலீஸ் செய்ததால் எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. நான் பிஸியா நடிச்சிட்டிருக்கேன். வேலையில்லாதவனுங்க என்ன வேணா செய்யட்டும்" என்று அசட்டையாக கூறியிருக்கிறார்.
 
ஆஹா... இதே ஒரு புதுமைப் பெண்.