1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Priyanka Chopra Was Rough On Clothes and Would Kick Rs 95,000 Shoes During Quantico, Says Stylist

ரூ.95,000 மதிப்புள்ள காலணிகளை உதைத்தார் பிரியங்கா சோப்ரா: பிரபல ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு!

பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2015-ம் ஆண்டு வெளியான 'குவாண்டிகோ' என்ற அமெரிக்க தொடரில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்றார். இந்நிலையில், அந்த தொடரின் படப்பிடிப்பின் போது பிரியங்கா சோப்ரா ஆடைகள் மற்றும் உடமைகளை மரியாதை குறைவாக கையாண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேரி டாபன் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய கேரி டாபன், மாண்ட்ரியல் நகரில் நடந்த 'குவாண்டிகோ' படப்பிடிப்பின் போது பிரியங்காவிற்கு ஆடை வடிவமைப்பு செய்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். "பிரியங்கா சோப்ரா என்னிடம் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் பழகினார். ஆனால், ஆடைகளுக்கான 'ஃபிட்டிங்' சோதனைகளின் போது அவர் ஆடைகளை மிகவும் முரட்டுத்தனமாக கையாண்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், "அத்தொடருக்காக பயன்படுத்தப்பட்ட உடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த சொகுசு பிராண்டுகளிடமிருந்து பெறப்பட்டவை. ஒருமுறை, சுமார் ரூ.95,000 மதிப்புள்ள 'ஜிவஞ்சி' பிராண்ட் காலணி ஒன்றை பிரியங்கா சோப்ரா அலட்சியமாக உதைத்து தள்ளினார். ஆடைகளை மதிப்பது முக்கியம் என்பதால் அவரது இந்த செயல் எனக்கு வருத்தமளித்தது," என்றார். இருப்பினும், தொழில்முறை ரீதியாக பிரியங்கா சோப்ரா தமக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜான்வி கபூரின் ஓவர் கிளாமர் காட்சிகள்.. மன்னிப்பு கேட்ட ‘பெத்தி’ பட இயக்குனர்...