வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 1 மார்ச் 2017 (12:26 IST)

பவர் பாண்டி... படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கியது

இயக்குனராக தனுஷின் முதல் படம் பவர் பாண்டி. இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்துள்ளனர்.

 
ஸ்டண்ட் கலைஞரை மையப்படுத்திய பவர் பாண்டியில் ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ளார். பிரசன்னா, மடோனா, சாயா சிங்  ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை.
 
இதன் ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் பாக்கியிருப்பதாக தனுஷ் ட்வீட் செய்திருந்தார். இப்போது அதையும் முடித்து பூசணிக்காய் உடைத்துள்ளனர். படபிடிப்பை நிறைவை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கையோடு போஸ்ட்புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
 
ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.